டாடா மோட்டார்ஸ் 2005ஆம் ஆண்டில் சிறு வணிக வாகன தொழில்துறையில் முன்னோடியாக டாடா ஏசை அறிமுகப்படுத்தியது. குட்டி யானை என பரவலாக அறியப்படும் டாடா ஏஸ் 23 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கு உதவியுள்ளது, மேலும் இந்தியாவில் விற்பனையாகும் மிகப்பெரிய வணிக வாகனப்பிராண்டாகவும் உள்ளது.
ஏஸின் சி.என்.ஜி (CNG) வேரியன்ட் 2008-இல் வெளியிடப்பட்டது. மற்றும் இதற்கும் அதே அளவு வரவேற்பு உள்ளது.
டாடா ஏஸ் கோல்ட் டீசல் பி.எஸ்-6 (BS-6) இப்போது அதிக மைலேஜ், சிறந்த பிக்-அப், அதிக சுமை தாங்கும் திறன், அதிக வசதி, குறைந்த பராமரிப்பு, அதிக இலாபங்களுடன் வருகிறது.